மேலும்

10 மாதங்களில் 6.1 மில்லியன் பேர் குறித்து சிறிலங்கா காவல்துறை விசாரணை

இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை- சுமார் 6.1மில்லியன் நபர்கள் (6,127,138)  பல்வேறு ஆய்வு மற்றும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் தேயிலை உற்பத்தியைக் குறி வைக்கிறது சீனா

சிறிலங்காவின் தேயிலை உற்பத்தியில் முதலீடு செய்வது குறித்து சீன முதலீட்டாளர்கள் குழுவொன்று ஆராய்ந்துள்ளது.

சிறிலங்காவில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்  திறன்பேசி பயன்படுத்த விரைவில் தடை

சிறிலங்காவில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலைச் சிறுவர்கள்  திறன்பேசி (ஸ்மார்ட்போன்) பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஆழ்கடலில் செயலிழந்த கப்பலின் 14 மாலுமிகளும் மீட்பு

சிறிலங்காவிற்கு தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில், முக்கிய இயந்திரங்கள் செயலிழந்து தத்தளித்த  இன்டர்கிரிட்டி  ஸ்டார் ( INTEGRITY STAR) என்ற வணிகக் கப்பலின் பணியாளர்களை சிறிலங்கா கடற்படை மீட்டுள்ளது.

உள்ளூராட்சி தலைவர்களின் பாதுகாப்புக்கு காவல்துறை சிறப்புத் திட்டம்

உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களின் பாதுகாப்பிற்காக ஒரு சிறப்பு பாதுகாப்பு திட்டத்தை செயற்படுத்துவதற்கு சிறிலங்கா  காவல்துறை மா அதிபர் திட்டமிட்டுள்ளார்.

புலம்பெயரும் தொழிலாளர் எண்ணிக்கை வீழ்ச்சி

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 5சத வீதத்தினால் குறைந்துள்ளது.

சீன- சிறிலங்கா கல்வி, ஆராய்ச்சி மையத்தின் கருத்தரங்கு

சீன-சிறிலங்கா கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டு மையம் அமைக்கப்பட்டதன் 10வது ஆண்டு நிறைவு, வியாழக்கிழமை கொழும்பில் கொண்டாடப்பட்டுள்ளது.

காணாமல் போனோரின் நினைவு தினம் – அழைப்புக்கு பதிலளிக்காத சிறிலங்கா அதிபர்

சீதுவ, ரத்தொலுவவில் உள்ள காணாமல் போனோருக்கான நினைவுச்சின்னத்தில், நாளை நடைபெறவுள்ள காணாமல் போனோருக்கான 35வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்புகளுக்கு சிறிலங்கா அதிபர் அனுர குமார திசாநாயக்க தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்.

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை முன்கூட்டியே இடைநிறுத்தம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான, பயணிகள் கப்பல் சேவை முன்கூட்டியே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக துறை தலைவருடன் பிமல் ரத்நாயக்க சந்திப்பு

சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலகத் துறைத் தலைவர் நீ லியு ஹெய்சிங்கைச்  (Nie Liu Heixing)  சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.