மேலும்

கிளிநொச்சியில் வலுவான இராணுவ இருப்பு அவசியம்- மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா

நீண்டகால அமைதியையும் உறுதித்தன்மையையும் உறுதி செய்வதற்காக,  கிளிநொச்சியில் வலுவான இராணுவ இருப்பைப் பேணுவதன் மூலோபாய முக்கியத்துவத்தை, சிறிலங்காவின் இராணுவத்தின் யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

காலக்கெடுவுக்குள் ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்குவது சாத்தியமில்லை

ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா வழங்கியுள்ள விலக்கு ஏப்ரல் 11 ஆம் நாள் காலாவதியாகும் முன்னர், ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுடன் ஏற்பாடுகளை இறுதி செய்வது கடினமாக இருக்கும் என்று சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார்.

குமார ஜயகொடி மீது எந்த நடவடிக்கையும் இல்லை – அமைச்சராக தொடருவார்

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் அமைச்சர் பதவி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அமைச்சர் பதவியில் தொடர்வார் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஐ.நாவைக் குற்றம்சாட்டுகிறது காணாமல் போனோருக்கான பணியகம்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகளில், அனைத்துலக அமைப்புகளின் தலையீட்டை காணாமல் போனோருக்கான பணியகம் நிராகரித்துள்ளது.

முன்னிலை சோசலிச கட்சி அலுவலகத்தை ஜேவிபி கைப்பற்றியது சட்டவிரோதம்

யக்கலவில் உள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலகத்தை ஜேவிபி கைப்பற்றியது சட்டவிரோதம் என்றும், அதனை  முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்குமாறும்,  கம்பஹா நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

126 சீனர்களை நாடு கடத்தியது சிறிலங்கா

நுழைவிசைவு விதிமீறல்களுக்காக கைது செய்யப்பட்ட ஆறு பெண்கள் உள்ளிட்ட 126 சீனர்கள் நேற்று இரவு சிறிலங்காவில் இருந்து  சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

துறைமுக நகரில் முதலீடு செய்ய ரஷ்யாவை அழைக்கும் சிறிலங்கா

கொழும்பு துறைமுக நகரில் முதலீடு செய்வதற்கான சாத்தியங்களை ஆராயுமாறு, ரஷ்ய வெளியுறவு அமைச்சிடம் சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுக்கவுள்ளது.

இராணுவ தேவைக்காக சிறிலங்கா துறைமுகங்களை கோரும் நாடுகள்

சிறிலங்காவின் துறைமுகங்களை இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்த சில நாடுகள் அனுமதி கோரியுள்ளதாக  தகவல் கிடைத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சரும் கொழும்பு வருகிறார்

ரஷ்ய வெளியுறவு பிரதி அமைச்சர் அண்ட்ரே ருடென்கோ நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்துக்கு தென்கொரியாவில் விருது

சிறிலங்காவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம், தென்கொரியாவில் குவாங்ஜூ மனித உரிமை விருது (Gwangju Prize for Human Rights) வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.