மேலும்

ரில்வின் சில்வாவைச் சந்தித்தார் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா

ஜேவிபியின்  பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவை, சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக பதவியேற்றார் எரிக் மேயர்,

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர், அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுள்ளார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தேவைப்பட்டால் பதவியை விட்டு விலகவும் தயார் – என்கிறார் அனுர

தேவைப்பட்டால் பதவியை விட்டு விலகவும் தான் தயாராக இருப்பதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று மட்டும் செம்மணிப் புதைகுழியில் 15 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மட்டும் 15 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மூத்த ஊடகவியலாளர் சபேசனின் உடலுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி

கனடாவில் காலமான மூத்த ஊடகவியலாளர்  ஆறுமுகம் சபேஸ்வரனின் (சபேசன்) உடலுக்கு  நேற்றிரவு யாழ். ஊடக அமையத்திலும், யாழ் தினக்குரல் நாளிதழ் பணியகத்திலும்  அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

கொழும்பு வந்தார் புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங்

சிறிலங்காவுடன் அபிவிருத்தி மூலோபாயங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் சீனா தயாராக இருப்பதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang)  தெரிவித்துள்ளார்.

செம்மணியில் மேலும் இரு இடங்களில் எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அருகே எழுமாற்றாக தோண்டப்பட்ட இரண்டு இடங்களிலும் மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நீண்ட வாதங்களுக்குப் பின்னர் சாகர காரியவசம் பிணையில் விடுவிப்பு

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்  பொதுச் செயலாளர் சாகர கரியவசம், கடுவெல நீதிவான் அருண புத்ததாசவினால்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அடுத்தவாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது 22வது திருத்தச் சட்டமூலம்

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் வகையிலான,  22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் 18ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பி்க்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் எதிர்க்கட்சி

உயர்நீதிமன்றம்  மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்களைக் கோரும்,  22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து  ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடி வருகிறது.