மேலும்

செம்மணி கூட்டுப் புதைகுழிகள் – அனைத்துலக தரத்துடன் விசாரணை நடத்த வேண்டும்

செம்மணி கூட்டுப் புதைகுழிகள் குறித்து அனைத்துலகத் தரத்திற்கு இணங்க, நம்பகமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சிறிலங்காவிடம் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

தலைமறைவானார் ஞானசார தேரர் – தேடிச் சென்ற சிறை அதிகாரிகள் ஏமாற்றம்

சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு செல்லுபடியற்றதென உயர்நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டதை அடுத்து பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமறைவாகியுள்ளார்.

மூழ்கிய அதிவேகத் தாக்குதல் படகை மீட்டது சிறிலங்கா கடற்படை

அங்குலான கடற்பகுதியில் மூழ்கிய சிறிலங்கா கடற்படையின்  பி 4447 அதிவேகத் தாக்குதல் படகு, மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக விசாரணைப் பொறிமுறை கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி

தமிழினப் படுகொலைகள் தொடர்பாக அனைத்துலக நீதி விசாரணைப் பொறிமுறையொன்றை தாமதமின்றி உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பேரவையினால் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிக்கு பிணை வழங்கியதற்கு எதிராக சட்டமா அதிபர் மேல்முறையீடு

தமிழ் அரசியல் கைதி ஒருவருக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியதை எதிர்த்து சிறிலங்கா சட்டமா அதிபர் மேல்முறையீடு செய்யவுள்ளார்.

இந்திய, சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்

சிறிலங்கா மற்றும் இந்தியக் கடற்படைகளுக்கு இடையில் ஆண்டு தோறும் நடத்தப்படும்  இருதரப்பு கடற்படைப் பயிற்சியான SLINEX 2026- கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பமாகவுள்ளது.

எயர் பஸ் ஊழல் வழக்கில் நாமலை சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர் உத்தரவு

சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயர் பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்ற ஊழல்  குறித்த வழக்கில், நாமல் ராஜபக்சவை சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

போதைப்பொருள் வலையமைப்பே சிறிலங்காவின் பிரதான பாதுகாப்பு அச்சுறுத்தல்

சிறிலங்காவில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் தஞ்சம் புகுந்த பின்னர், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை திருப்பி அனுப்புவதற்கு சிறிலங்கா அதிபர்  இந்தியாவின் ஆதரவை  கோரியுள்ளார்.

சீனாவின் அண்டை நாடுகளுடனான இராஜதந்திரத்தில் சிறிலங்காவுக்கு முன்னுரிமை

தனது அண்டை நாடுகளுடனான இராஜதந்திரத்தில் சிறிலங்காவுக்கு சீனா முன்னுரிமை அளிப்பதாக சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றக் குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய தேர்தல் முறை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட, சிறப்பு நாடாளுமன்றக் குழுவின் பதவிக்காலத்தை மேலும் நீடிப்பதற்கு சிறிலங்கா நாடாராளுமன்றம் நேற்று அனுமதி அளித்ததுள்ளது.