மேலும்

அமெரிக்காவின் பசுபிக் விமானப்படைகளின் தளபதி சிறிலங்காவுக்குப் பயணம்

அமெரிக்காவின் பசுபிக் விமானப்படைகளின் (PACAF) தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் (Kevin Schneider) மூன்று நாள் பயணமாக நேற்று சிறிலங்காவை இலங்கை வந்தடைந்துள்ளார்.

சிறிலங்காவுக்கு 4 மில்லியன் டொலர் செய்மதி தொடர்பு கட்டமைப்பை வழங்கும் அமெரிக்கா

இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பையும் இணைப்பையும் வலுப்படுத்தும் நோக்கில், சிறிலங்கா கடற்படைக்கு, 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கப்பல் அகலக்கற்றை செய்மதி தகவல் தொடர்பு அமைப்பை வழங்குவதாக அமெரிக்கா  அறிவித்துள்ளது.

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர் சிறிலங்கா வருகை

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் எஸ். போல் கபூர், மூன்று நாள் பயணமாக  நேற்று சிறிலங்காவை  வந்தடைந்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து அனைத்துலக விசாரணை கோரி போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அனைத்துலக நீதி கோரி, யாழ்ப்பாணம் செம்மணியில் நேற்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செம்மணிப் புதைகுழி விசாரணைக்கு உள்நாட்டு சட்டங்களே போதும்

செம்மணி, மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை விரைவாக முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவது அரசாங்கத்தின் கடமையாகும் என சிறிலங்காவின் நீதி அமைச்சர், ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

செம்மணிப் புதைகுழியில் 400 ஐ நெருங்கிய எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி, மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மேலும் 03 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பிடியாணையை நீக்க கோரிய பசில் – நீதிவான் நிராகரிப்பு

வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதற்காக, சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை, திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை, மாத்தறை பிரதம நீதிவான் சதுரங்க எரங்க திசநாயக்க, நிராகரித்துள்ளார்.

சஷீந்திர ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல்

இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச மற்றும்  இருவருக்கு எதிராக,  கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பயங்கரவாதத்தைத் தடுக்க இரண்டு மாதங்களில் புதிய சட்டமூலம்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டு,  தனிநபர்களையோ அல்லது பிற தரப்பினரையோ ஒடுக்குவதற்காக அல்லாமல், பயங்கரவாதத்தைத் தடுக்கும் நோக்கத்திற்காக மட்டுமே ஒரு புதிய சட்டமூலம், இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்காவின் நீதி  அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வலி.வடக்கு காணி உரிமையாளர்கள் பலாலியில் இன்றும் போராட்டம்

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது  காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.