பிரித்தானிய காவல்துறையினரால் சிறிலங்காவைச் சேர்ந்த 10 முகவர்கள் கைது ^தோற்றுப்போனதால் நடுவரைத் தாக்கிய மகிந்தவின் மகன் இடைநிறுத்தம்? ^சிறிலங்காவுக்கு துணை நிற்குமாம் இந்தியா – அசோக் கே காந்தாவின் உறுதிமொழி ^கிழக்கிலும் சிங்களவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்கிறது இந்தியா ^யாழ்ப்பாணத்திற்கான பயணம் - ஒரு பயணியின் குறிப்புகள் ^ஐ.நா குழுவின் காதில் பூ வைத்த யாழ்.படைத் தளபதி ^சிறிலங்கா அரசாங்கம் தவறிழைத்து விட்டது – பொது பல சேனா குற்றச்சாட்டு ^சீனா செல்லும் மகிந்தவின் திட்டம் என்ன? - செய்தித்துளிகள் ^ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 01 ^தொலைபேசியில் மிரட்டினாரா குர்ஷித்? - பீரிஸ் விளக்கம் ^
இன்றைய செய்திகள்
புதன், 22-05-2013
செவ்வாய், 21-05-2013
திங்கள், 20-05-2013
ஞாயிறு, 19-05-2013
சனி, 18-05-2013
வெள்ளி, 17-05-2013
வியாழன், 16-05-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
'தமிழீழ சுதந்திர சாசனம்' : நாடுகடந்த தமிழீழ அரசு வெளியீடு
அமெரிக்காவின் பென்சிலவேனியா பெருநகரில் மே 15ம் நாள் முதல் இடம்பெற்றிருந்த 'நாடுகடந்த தமிழீழ அரசின் முரசறைவு மாநாடு' முள்ளிவாய்க்கால் நிகழ்வேந்தல் நிகழ்வுகளுடன் 18ம் நாள் நிறைவு பெற்றது. [விரிவு]
புலிகளைப் பிளவுபடுத்தவே பிறேமதாச ஆயுதங்களைக் கொடுத்தாராம் – அவரது மகன் ஒப்புதல்
மாத்தயா தலைமையிலான புலிகளை பலப்படுத்துவதன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு எதிராக பிளவை ஏற்படுத்தவே அவர் அவ்வாறு ஆயுதங்களை வழங்கினார்” என்றும் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார். [விரிவு]
லயன் எயர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா, கடத்தப்பட்டதா? – புதிதாக கிளம்பும் சந்தேகம்
விமானத்தைக் கடத்துவதற்கு உக்ரேனிய நாட்டவரான விமானி மடோச்கோ அன்ஸ்ரோலி விடுதலைப் புலிகளுடன் பேரம் பேசியிருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். [விரிவு]
கோத்தாவை கலங்க வைத்த இந்திய ஊடகங்கள்
இதனால் விசனமடைந்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, நேற்று மாலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை சந்தித்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் நடத்திய கலந்துரையாடல் குறித்து விளக்கம் கேட்டுள்ளார். [விரிவு]
றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றுகிறார் இந்திய வம்சாவளி பெண் இராஜதந்திரி
தெற்கு மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலராகப் பணியாற்றும் றொபேட் ஓ பிளேக்கின் இடத்துக்கு, இந்திய வம்சாவளிப் பெண் இராஜதந்திரியின் பெயரை ஒபாமா நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. [விரிவு]
தடுப்பு முகாம் மக்களை மறந்துவிட்டு, பௌத்த சிங்கள-தமிழ் புத்தாண்டினை முழு நாடும் கொண்டாடுகிறது
[ வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2010, 08:44 GMT ] [ தி.வண்ணமதி ]
30 வருடகாலப் போர் முடிவுக்கு வர, மலர்ந்திருக்கும் சமாதானத்தினைக் கொண்டாடும் வகையில் பாரம்பரிய பௌத்த சிங்கள-தமிழ் புத்தாண்டு தேசிய விடுமுறை நாளாக நாட்டினது தலைநகர் கொழும்பில் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆனால், வடக்கில் 83,000 க்கும் அதிகமான தமிழ்ப் பொதுமக்கள் தடுப்பு முகாம்களில் தொடர்ந்தும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

30 ஆண்டு காலப் போரின் பின்னர் ஓர் அமைதியான சூழமைவில் நாட்டினது பௌத்த சிங்களவர்களும் இந்து மதத்தினைப் பின்பற்றும் தமிழர்களும் தங்களது புத்தாண்டினைக் கொண்டாடியுள்ளார்கள்.

விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையே மே 2009 வரை இடம்பெற்ற கொடூரமான மோதல்களின் திகில் அனுபங்களைச் சுமந்து நிற்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் புதிதோர் சூழமைபில் புத்தாண்டினை எதிர்கொள்கிறார்கள்.

கிறீஸ்தவர்கள், முல்லீம்கள் உள்ளிட்ட நாட்டினது ஏனைய சமூகத்தவர்களும் இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பங்கெடுத்தார்கள். ஆனால், வடக்கிலுள்ள தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் 83,000 க்கும் அதிகமான தமிழ் பொதுமக்களுக்கு இந்தப் புத்தாண்டும் துன்பம் நிறைந்ததாகவே அமைந்திருக்கிறது.

'கடந்த 10ஆண்டு காலத்தில் புத்தாண்டிற்காக நான் விடுமுறையில் வீட்டுக்குச் செல்வது இதுவே முதன்முறை' என கமல் குமார கங்கந்த என்ற படைவீரர் கூறுகிறார். 'விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் எதுவுமின்றி சிங்கள-தமிழ் புத்தாண்டினைக் கொண்டாடுவதில் நாம் மகிழ்வடைகிறோம்' என அவர் தொடர்ந்தார்.

நாட்டில் நிரந்தர சமாதானம் நிலைக்கவேண்டும் என வேண்டி இந்து ஆலயங்களிலும் பௌத்த கோவில்களிலும் ஏன் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புத்தாண்டு நாளில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றிருக்கின்றன.

நாட்டினது அனைத்து இன மக்களதும் நலனுக்காகவும் அவர்களது அமைதிக்காகவும் இறைவனைப் பிராத்திப்பதாக புத்தாண்டு நாளில் இடம்பெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்ட பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

எது அவ்வாறிருப்பினும் நாட்டினது வடக்குப் பகுதியிலுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தொடர்ந்தும் அடைக்கப்பட்டிருக்கும் 83,000 தமிழர்களது வாழ்வில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் எதுவிதமான மாறுதல்களையும் ஏற்படுத்திவிடவில்லை.

விடுதலைப் புலிகளின் மீதான இறுதி யுத்தத்தினை அரச படையினர் முடுக்கிவிட, சனவரி 2009ம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்த இந்த மக்களை சிறைக் கைதிகள் போலவும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் போலவுமே அரசாங்கம் கருதிச் செயற்பட்டு வருகிறது.

மீளக்குடியேறுபவர்கள் தங்களது வதிவிடங்களைத் திருத்தியமைப்பதற்கு வழங்கப்படும் 25,000 ரூபாய் பணத்தினைத் தொடர்ந்தும் வழங்குவதற்குப் போதிய நிதி அரசாங்கத்திடம் இல்லை என அகதிகளுக்கான ஐ.நாவின் உயர் ஆணையம் கூறுகிறது.

போர் மேகங்கள் அகன்ற, அமைதியானதொரு சூழலில் புதுவருடம் கொண்டாடப்படுகிறது என்ற தோற்றப்பாட்டினை அரசியல் வாதிகளும் ஊடகங்களும் ஏற்படுத்தி வருகின்றன என National Fisheries Solidarity Movement என்ற அமைப்பின் பொறுப்பாளரும் கத்தோலிக்க மதத் தலைவருமான கேமன் குமார தெரிவிக்கிறார்.

'நாங்கள் எல்லோரும் ஒரு தேசியத்தினைச் சேர்ந்த மக்களே என்பதை மனதிற்கொண்டு செயற்படுவதற்கு நாம் தவறிவிட்டோம். மரங்களின் கீழ் வாழும் அந்த மக்களையும் எங்களது நாட்டினது குடிமக்களாக நாம் ஏற்றுக்கொள்ளவில்லை? அவர்களையும் எங்களில் ஒருவராக நாம் ஏன் கருதிச் செயற்படக்கூடாது? என்கிறார்' கேமன் குமார.

'சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்குகான ஒரு சிறந்த சந்தர்ப்பத்தினை சிங்கள தமிழ் புத்தாண்டு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. வெறும் வெற்று வார்த்தைகளை மாத்திரம் வெளியிடாது, இன நல்லிணக்கம் என்ற பாதையில் பொறுப்புடன் பயணிப்பதற்கு அரசியல் தலைமைகள் தவறிவிட்டன' என கிறிஸ்தவ மதகுருவான அன்ரனி கூறுகிறார்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து
பிந்திய 10 செய்திகள்
 
பிரித்தானிய காவல்துறையினரால் சிறிலங்காவைச் சேர்ந்த 10 முகவர்கள் கைது
தோற்றுப்போனதால் நடுவரைத் தாக்கிய மகிந்தவின் மகன் இடைநிறுத்தம்?
சிறிலங்காவுக்கு துணை நிற்குமாம் இந்தியா – அசோக் கே காந்தாவின் உறுதிமொழி
கிழக்கிலும் சிங்களவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்கிறது இந்தியா
யாழ்ப்பாணத்திற்கான பயணம் - ஒரு பயணியின் குறிப்புகள்
ஐ.நா குழுவின் காதில் பூ வைத்த யாழ்.படைத் தளபதி
சிறிலங்கா அரசாங்கம் தவறிழைத்து விட்டது – பொது பல சேனா குற்றச்சாட்டு
சீனா செல்லும் மகிந்தவின் திட்டம் என்ன? - செய்தித்துளிகள்
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 01
தொலைபேசியில் மிரட்டினாரா குர்ஷித்? - பீரிஸ் விளக்கம்