 சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் தொலைபேசி மூலம் தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக மன்னார் நீதிவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் மன்னார் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
உப்புக்குளம் மீனவர்களின் போராட்டத்தை அடுத்து மன்னார் நீதிவான், பிறப்பித்த உத்தரவை நிறுத்தக் கோரி, றிசாத் பதியுதீன் அவரை அச்சுறுத்தியிருந்தார்.
இதுகுறித்து நேற்று மன்னார் நீதிவான் சிறிலங்கா காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கிடையெ சிறிலங்கா அமைச்சர் மன்னார் நீதிவானுக்கு அச்சுறுத்தல் விடுத்த விவகாரம் நாடெங்கும் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது.
இதனால், நேற்று சிறிலங்காவின் அனைத்து நீதுமன்றப் பணிகளும் முடங்கின.
சட்டவாளர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டதால் சிறிலங்காவின் அனைத்து நீதிமன்றப் பணிகளும் முற்றாகப் பாதிக்கப்பட்டன.
சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் சட்டவாளர்கள் கோரியுள்ளனர்.
இந்த விவகாரம் பூதாகாரமாகியுள்ள நிலையில், சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான முறைப்பாடு குறித்து விசாரணை நடத்துமாறு சிறிலங்கா காவல்துறைமா அதிபருக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். |